சிவகாசி வெடி விபத்து: முதல்வர் இரங்கல்

76பார்த்தது
சிவகாசி வெடி விபத்து: முதல்வர் இரங்கல்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி