தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிகரித்து வருவதாகசீமான் பேச்சு

59பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை
சந்தித்து பேசுகையில்
தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்றும் சீமான் குற்றம் சாட்டினார் "நாம் இன்னும் கொல்லப்படவில்லையே" என்ற மனநிறைவுடன் மக்கள் வாழ வேண்டிய நிலை உள்ளது என்று சீமான் கூறினார்கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்று சீமான் தெரிவித்தார். குற்றங்கள் செய்துவிட்டு 90 நாட்களில் குற்றவாளிகள் வெளியே வருவதாக அவர் கூறினார்சாட்சி சொல்ல பொதுமக்கள் பயப்படுவதால் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க முடியவில்லை என்று சீமான் கூறினார்சட்டப் பாதுகாப்பு இல்லாததால், சாட்சி சொல்ல பொதுமக்கள் தயங்குவதாகவும் சீமான் தெரிவித்தார்பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதுகாப்பாக அனுப்ப முடியாத சூழலில் மக்கள் இருப்பதாக கூறினார். கனிம வளம் குறித்து தகவல் தெரிவித்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி இருந்தால் குற்றங்கள் குறையும் என்று சீமான் கூறினார் கனிம வளம் கொள்ளை குறித்து வீடியோ மூலம் தகவல் தெரிவித்தும் சமூக ஆர்வலருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று சீமான் குற்றம் சாட்டினார்தமிழகத்தில் கொன்றுவிட்டு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வந்தது என்றார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி