சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சக்தி அழைப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி ஏந்தியும், தீர்த்தக்குடம் ஏந்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.