சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே தகர புது ஊராட்சியை சார்ந்த வெங்கட்டன் மகன் ஸ்ரீதர் (வயது 54). இவர், டாஸ்மாக் கடையில் மது வாங்கி அதனை கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் விரைந்து வந்து ஸ்ரீதரை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் செந்தாரப்பட்டி அருகே மண்மலை பாலக்காட்டில் மது விற்பனை செய்த வேலு மகன் ஜெயராமன் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், டாஸ்மாக் கடையில் அதிக மதுபாட்டில்களை விலைக்கு வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.