இளம்பிள்ளை அருகே கோயில் உண்டியல் திருட்டு, போலீசார் மெத்தனம்

73பார்த்தது
இளம்பிள்ளை அருகே கோயில் உண்டியல் திருட்டு, போலீசார் மெத்தனம்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த புளியம்பட்டி பகுதியில்  சக்தி ஹரிசந்திரன் பெரியாண்டிச்சி அம்மன் குலதெய்வ கோயில் உள்ளது. இக்கோயிலில் சேலம் நரசோதிப்பட்டி , ஏற்காடு அடிவாரம், மருளையம்பாளையம், பாப்பாபட்டி, புளியம்பட்டி, தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் கோவிலுக்கு முக்கிய நாட்களிலும், அமாவாசை நாட்களிலும் தரிசனம் செய்து  வேண்டுதல் காணிக்கையாக பணம் மற்றும் பவுன், வெள்ளி  செலுத்துவது வழக்கம். இந்த  உண்டியல் ஆனது மூன்று மாதத்திற்கு ஒருமுறை கோயில் நிர்வாகத்தின் சார்பில்  திறப்பார்கள். இந்நிலையில் கோயிலுக்கு சென்ற பக்தர் கோயிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டதை அறிந்த பின்னர் நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதனையடுத்து கோயில் நிர்வாகத்தினர்  உண்டியலில் சுமார் ரூ. 25 ஆயிரம் பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்டவை இருக்க கூடும் என காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்தனர். இத் திருட்டு குறித்து வீடியோ வைரல் ஆகி வருகின்றன. மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸ் உண்டியல் திருடிய மர்ம ஆசாமியை பிடிக்காமல், காலம் கடத்தி வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி