சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் வடகோடிப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சதீஷ் (33). லாரி ஓட்டுனரான இவர் அவரது வீட்டின் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சதீஷ் நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சடைந்தனர் உடனாடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் அவரது அவர் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போதுமக்களே சேர்ந்து அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர், மேலும் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் கால் சிக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த டிரைவர் சதீஷ்க்கு ரோஜா என்ற மனைவியும் ஐந்து வயதில் தினேஷ், மூன்று வயதில் திலீபன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.