ஆத்தூரில் பாதுகாப்பில்லாத ஆதி திராவிடர் நலவிடுதி - அச்சத்தில் மாணவிகள்

69பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு ஆதி திராவிடர் நல விடுதி உள்ளது இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழையால் விடுதியில் சுற்றுச்சுவர் முழுமையாக இடிந்து விழுந்தது. தற்பொழுது பல மாதங்கள் ஆகியும் மீண்டும் தடுப்பு சுவர் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. அந்த பகுதியில் ஏற்கனவே பல குற்றச் செயல்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பள்ளி விடுதிக்கான தடுப்பு சுவர் இல்லாததால் மாணவிகள் அச்சுத்துடனே விடுதியில் தங்கி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சுற்று சுவர் அமைத்துதர வேண்டுமென மாணவிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது .

தொடர்புடைய செய்தி