காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியல்

65பார்த்தது
ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை பற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் மணிக்கூண்டு பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொடர்புடைய செய்தி