திருப்பூரில் மலர்ந்த மதநல்லிணக்கம்.. நெகிழ்ச்சி சம்பவம்

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் ஓட்டப்பாளையம், ரோஸ் கார்டன் பகுதியில் விநாயகர் கோயில் கட்டுவதற்காக பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள். இப்பகுதியில் ஏற்கனவே பள்ளிவாசல் உள்ளது. ஆனால், இந்துக்கள் வழிபாடு செய்ய கோயில் ஏதும் இல்லாததால் ரூ.6 லட்சம் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். தற்போது அங்கு விநாயகர் கோயில் கட்டப்பட்டு, இன்று குடமுழுக்கு நிகழ்வு நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் மேளதாளம் முழங்க சீர்வரிசை எடுத்து வந்து அசத்தினர். இச்சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி