மறு வாக்கு எண்ணிக்கை - டெல்லியில் இன்று தேமுதிக புகார்

83பார்த்தது
மறு வாக்கு எண்ணிக்கை - டெல்லியில் இன்று தேமுதிக புகார்
விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடைபெற்றதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தார். இதனால், விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், இன்று (ஜூன் 12) மதியம் 3.30 மணியளவில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க இருக்கிறார். மறு வாக்கு எண்ணிக்கை கோரி, ஏற்கனவே தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி