திருவடனை - Tiruvadanai

திருவாடானை: திரோபதை வேடமிட்டு வீதிஉலா வந்த பக்தர்கள்

திருவாடானை அருள்மிகு தர்மர் மற்றும் அருள்மிகு திரோபதை அம்மன் கோவில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு மகாபாரத போரின் 17ம் நாள் நிகழ்வாக திரோபதை வேடமிட்டு வீதி உலா வந்த பக்தர்கள். திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படும் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு தர்மர் மற்றும் அருள்மிகு திரோபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து இன்று 9வது நாள் திருவிழா நிகழ்வாக மகாபாரத போரின் 17வது நாள் நிகழ்வினை நினைவுகூறும் வகையில் போரில் வெற்றி பெற்றவுடன் தனது தலை முடியை அள்ளி முடிந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திரோபதை அம்மன் வேடமிட்ட பக்தர்கள் திருவாடானை நகர் முழுவதும் இரவில் சுற்றி வீதி உலா வந்தனர். இவர்களை பொதுமக்களும் பக்தர்களும் வழிபட்டனர். இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். எத்தனையோ ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


இராமநாதபுரம்
Apr 04, 2025, 17:04 IST/முதுகுளத்தூர்
முதுகுளத்தூர்

விருதுநகா்: தனியாா் பள்ளிப் பேருந்தும், ஆம்னி வேனும் மோதி விபத்து

Apr 04, 2025, 17:04 IST
கமுதி- முதுகுளத்தூர் புறவழிச்சாலையில் வியாழக்கிழமை தனியார் பள்ளிப் பேருந்தும், ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் ஜவுளி வியாபாரி பலத்த காயமடைந்தார்.  விருதுநகர் மாவட்டம், தும்முசின்னம்பட்டியைச் சேர்ந்த கோனேரி மகன் கருப்பையா இவர் ஆம்னி வேனில் வெளியூர்களுக்குச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று விட்டு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி புறவழிச் சாலை வழியாக தும்முசின்னம்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அரண்மனைமேடு நான்குமுனை சந்திப்பில், செங்கப்படையில் மாணவர்களை இறக்கிவிட்டு, கமுதி நோக்கி வந்த தனியார் பள்ளிப் பேருந்தும், ஆம்னி வேனும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஜவுளி வியாபாரி கருப்பையா கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பிறகு தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதனிடையே, கமுதி- முதுகுளத்தூர் புறவழிச் சாலையில், அரண்மனைமேடு, பாப்பாங்குளம் விலக்கு, உலகநடை விலக்கு, வழிவிட்டஅய்யனார் கோயில் விலக்கு ஆகியவை சந்திக்கும் பகுதியில் வேகத் தடை அமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்