கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு.!

55பார்த்தது
கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு.!
திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் காயத்திரி 45. இவருக்கு சொந்தமான பசு மாடு மேய்ச்சலுக்காக சென்ற போது எதிர்பாராத விதமாக 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.

திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று கிணற்றுக்குள் இறங்கி, மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

திருவாடானை அருகே கட்டிவயல் கிராமத்தில் அய்யனார் கோயில் முன்புள்ள தென்னை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. அந்தப்பக்கமாக சென்றவர்களை கடித்ததால் திருவாடானை தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கபட்டது. நிலைய அலுவலர் வீரபாண்டியன், வீரர்கள் சென்று தீப்பந்தம் மூலம் வண்டுகளை அழித்தனர்.

தொடர்புடைய செய்தி