ரயில் பெட்டிகள் முற்றிலும் அகற்றம்!

76பார்த்தது
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில், தண்டவாளத்தில் தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றப்பட்டுள்ளது. 9 பெட்டிகள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், எஞ்சி இருந்த 2 பெட்டிகளும் தற்போது கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டன. இன்று இரவுக்குள் 2 ரயில் பாதைகளும், நாளை காலைக்குள் மற்ற 2 பாதைகளும் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி