கடைக்குள் புகுந்த அரசு பேருந்து: 5 பேர் காயம்.!

5799பார்த்தது
கடைக்குள் புகுந்த அரசு பேருந்து: 5 பேர் காயம்.!
ராமநாதபுரம் பேருந்து பணிமனை அருகே கடைக்குள் புகுந்த அரசு பேருந்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ராமநாதபுரத்தில் இருந்து அரசு பேருந்து புதுமடம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டில் இழந்து அரசு பணிமனை அருகே உள்ள எலக்ட்ரிக் கடையில் புகுந்தது. இதனால், அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இது தொடர்பான சிசி டிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் இல்லை ஜந்து பேருக்கு காயமடைந்துள்ளனர். மேலும், கடையில் வைத்திருந்த எலக்ட்ரிக் பொருட்கள் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. கடை முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதம் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி