அதிகரிக்கப்படும் விவசாயிகளுக்கான ஆண்டு உதவித்தொகை?

593பார்த்தது
அதிகரிக்கப்படும் விவசாயிகளுக்கான ஆண்டு உதவித்தொகை?
மக்களவைத் தேர்தல் முடிந்த பின்பு விவசாயிகளுக்கு முதலீட்டு உதவி வழங்கும் பிரதமர் கிசான் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசின் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் முதலீட்டு உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால், இந்த தொகையை 50 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி