இரட்டை இலையை முடக்க கோரி ஓபிஎஸ் அணி மனு

84பார்த்தது
இரட்டை இலையை முடக்க கோரி ஓபிஎஸ் அணி மனு
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி சார்பில் புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம்காட்டி ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார் புகழேந்தி. மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சி உடைந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி