இராமநாதபுரம் - Ramanathapuram

மீண்டும் தொடங்கிய மீனவர்கள் போராட்டம்.!

மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் வருகின்ற இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீன்பிடித்தடை காலம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று மீனவர்கள் பிடித்து வரும் இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தொடர்ந்து மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதை அடுத்து மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்தித்து வரும் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

வீடியோஸ்


இராமநாதபுரம்
Jul 08, 2024, 02:07 IST/பரமக்குடி
பரமக்குடி

ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழா.!

Jul 08, 2024, 02:07 IST
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புது நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மங்கள இசையுடன் நேற்று தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மஹாபூர்ணாகுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமி க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.