![](https://media.getlokalapp.com/cache/4b/52/4b52c423badfbb5add7458d87e1b44d7.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
மீண்டும் தொடங்கிய மீனவர்கள் போராட்டம்.!
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் வருகின்ற இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீன்பிடித்தடை காலம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று மீனவர்கள் பிடித்து வரும் இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தொடர்ந்து மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதை அடுத்து மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்தித்து வரும் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.