சினிமா பிரபலங்கள் பொது வெளியில் வரும்போது அவர்களுடன் செல்ஃபி எடுக்க பொதுமக்களும் ரசிகர்களும் முண்டியடித்துக்கொண்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய்யுடன் செல்ஃபி எடுக்க கூட்டம் கூடியது. மேலும் வாக்களிக்க வந்த பிரபலங்களுடன் இணைந்து சீருடையில் இருக்கும் காவலர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் பணியில் இருக்கும்போது காவலர்கள் பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.