சென்னை அடுத்த கானாத்தூரில் கராத்தே மாஸ்டரை கொன்று கிணற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். கானாத்தூர் ரெட்டி குப்பத்தை சேர்ந்த கராத்தே
மாஸ்டர் லோகநாதன் கடந்த 13ம் தேதி காணமல் போனார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. விசாரணை நடத்திவந்த போலீசார், பெண் விவகாரத்தில் லோகநாதனை கொன்று கிணற்றில் வீசிய சுரேஷ் - கஸ்தூரி தம்பதியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்.