நேர்மையை நிரூபித்தால் ரூ.3.50 லட்சம் திருப்பி தரப்படும்

57பார்த்தது
நேர்மையை நிரூபித்தால் ரூ.3.50 லட்சம் திருப்பி தரப்படும்
கோயில் நிர்வாகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 பொதுநல வழக்குகளை தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதால் டெபாசிட் பணமான ரூ.3.50 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என ரங்கராஜன் தரப்பில் கோரப்பட்டது. “வழக்கு விசாரணைக்கு இன்னும் அனுமதிக்கவில்லை, அரசு தரப்பில் பதிலளிக்க மட்டுமே ஆணை பிறப்பித்துள்ளோம். ரங்கராஜன் தனது நேர்மை தன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த ரூ.3.50 லட்சம் பணத்தை திருப்பி தர முடியும்” என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி