காயமடைந்த மானை பத்திரமாக மீட்ட போலீசார்.!

71பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெடுங்குளம் கிராமம் அருகே கமுதி-மதுரை சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அந்த வழியாக சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளாகி மானின் காலில் காயம் ஏற்பட்டு ஓட முடியாமல் சாலை ஓரத்தில் கிடந்தது.

அந்த வழியாக அபிராமம் போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சார்பு ஆய்வாளர்கள் முருகன், விஜயராமன்
காவலர்கள் முனியசாமி, கபிலன் ஆகியோர் காவல் நிலைய பணிக்கு சென்ற நிலையில் மானின் பரிதாப நிலையை கண்டு அந்த போலீசார்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது காவல் ரோந்து வாகனத்தில் முதலுதவி அளித்து மானை கமுதி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து வனத்துறை அதிகாரிகளிடம் பொறுப்புடன் ஒப்படைத்தனர். அபிராமம் போலீசாரின் இந்த சமூகப் பணி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி