5 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்

67பார்த்தது
5 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்
தெலங்கானா மாநிலம் ஜம்மிகுண்டாவை சேர்ந்த ராஜு - ஜமுனா தம்பதியின் மகள் உக்குலு (5). நேற்று (அக். 15) சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிறந்ததில் இருந்தே சிறுமிக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருந்ததோடு அதை பெற்றோர் கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி