மாமூல் தர மறுத்த ஊழியருக்கு சோடா பாட்டிலில் அடி (Video)

56பார்த்தது
புதுச்சேரியில் உள்ள மளிகை கடைக்கு நேற்று (அக். 16) ரவுடி கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் போதையில் கடை ஊழியர்களிடம் சண்டைப் போட்டு மாமூல் பணம் கொடுக்குமாறு மிரட்ட தொடங்கினார்கள். ஆனால், மாமூல் பணம் தர முடியாது என கடை ஊழியர் கூறியதால் ரவுடிகளுக்கு ஆத்திரம் வந்தது. அதில் ஒருவர் சோடா பாட்டிலால் ஊழியரை தாக்க அவர் வலியால் துடித்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி