இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூக்கம்மாள் கோவில், தாய் மீனம்பாள் ஆலய 61வது மாசி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் மொத்தம் 51 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 14 மாட்டு வண்டிகள் பங்கேற்று அதில் 6 கிலோமீட்டர் தூரம் எல்லையாகவும்,
தேன்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 23 மாட்டு வண்டிகள் பங்கேற்று அதில் 5 கிலோமீட்டர் தூரம் எல்லையாகவும்
பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் 14 மாட்டுவண்டிகள் பங்கேற்று 4 கி. மீ தூரம் எல்கையாக
நிர்ணயிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடைபெற்றது.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகளும் மாடு ஓட்டும் சாரதிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த மாட்டு வண்டி போட்டியை காண முதுகுளத்தூர், கமுதி, மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.