2 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை

53பார்த்தது
2 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை
கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்., 26) பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி