வளர்ப்பு நாயை கடித்ததால் தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை

55பார்த்தது
வளர்ப்பு நாயை கடித்ததால் தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை
திருவேற்காட்டை சேர்ந்த மோகன் தெரு நாய்களுக்கு உணவுகள் அளித்து பராமரித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த பாலாஜி, தன் வீட்டில் பொமரேனியன் நாய் வளர்த்து வந்தார். அண்மையில் பாலாஜியின் நாயை, தெரு நாய்களில் சில கடித்து குதறியதில் நாய் உயிரிழந்தது. இதனால், ஆத்திரமடைந்த பாலாஜி உணவில் விஷத்தை கலந்து 2 தெரு நாய்களை கொன்றார். இது குறித்த புகாரில் பாலாஜியை கைது செய்த போலீசார் நேற்று (அக். 25) பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி