சிக்கன் குருமாவில் மனித பல்.. ஷாக் ஆன வாடிக்கையாளர்

60பார்த்தது
சேலம் ஐந்துரோடு அருகே அமைந்துள்ள அசோக் ஹோட்டலில் ஆட்டோ ஓட்டுநர் நாகராஜன் என்பவர் சாப்பிட்டபோது, சிக்கன் குருமாவில் மனித பல் கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு, கடை உரிமையாளர், “புகோர் கொடுத்துக்கோ, ரூ.2000 கொடுத்து திரும்ப கடையை திறந்துக்குகிறேன்” என திமிராக பேசியதாக தெரிகிறது. தொடர்ந்து, அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி