புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை கீழபா றைக்களம் பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 45), கூலி தொழிலாளி. இவர் குடுமியான்மலையில் உள்ள நெல்லி குளத்தில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் சிறிது நேரத்தில் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னையாவின் உடலை மீட்டனர். பின்னர் அன் னவாசல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அன்னவாசல் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.