

நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
விராலிமலை அருகே உள்ள தென்னம்பாடியைச் சேர்ந்த முருகேசன் (55) என்பவர் விராலிமலை செக்போஸ்ட் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.