![](https://media.getlokalapp.com/cache/42/ca/42caf7def87f5a75cced728ebb3385c8.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
இரும்பு கம்பிகள் திருடிய இருவர் கைது!
விராலிமலை ஒன்றியம் புரசம் பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (38). இவர் ராஜளி பட்டியில் ஹலோ பிளாக் கற்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார். நேற்று முன்தினம் இரவு நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். காலையில் நிறுவனத்தை திறக்க வந்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்த கட்டுமான கம்பிகளை திருடி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந் ததை பார்த்து கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அருகில் வசித்தவர்கள் ஓடிவந்து இருவரையும் பிடித்து விராலிமலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்த மகேந்திரன்(22), விராலிமலை ஒன் றியம் வடுகபட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த சதிஸ் குமார்(21) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.