மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை!
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் அண்ணா நகர் ஆறாம் வீதியில் வசிக்கும் குமாரவேல் வயது 54 இவர் தனது வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர். தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி கலைச்செல்வி கொடுத்த புகாரில் மாத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் விசாரணை செய்து வருகிறார்.