தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்த நிலையில், மாணவர் கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. சட்டக் கல்லூரி மாணவரான சதீஷ்குமார், தனது அப்பா ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென தீ பற்றி எரிந்ததால் செய்வதறியாமல் திகைத்து நின்ற மாணவர், தனது தந்தைக்கு போன் செய்து கதறி அழுதுள்ளார். இதனைப் பார்த்த சக வாகன ஓட்டிகள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.