புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் ஊராட்சியில் காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இன்று(அக்.05) நடைபெற்றது. இதில் சைபர் குற்றங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், உதவி எண்கள் 181, 1098 குறித்தும் கிராம மக்களிடையே விழிப்புணர்வு நடைபெற்றது.