கறம்பக்குடியில் அரசு திட்ட பணிகள்: கலெக்டர் திடீர் ஆய்வு!

68பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் எம் தெற்கு தெரு ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மழையூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கறம்பக்குடி அரசு மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனைகளை சுகாதார முறையில் பராமரித்திடவும் தேவையான பணியாளர்களை பணியமர்த்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி பரமசிவம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் கறம்பக்குடி வட்டாட்சியர் ஜபருல்லா பேரூராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி