கருத்துக்கணிப்பு விவாதங்கள் - காங்கிரஸ் பங்கேற்கவில்லை

59பார்த்தது
கருத்துக்கணிப்பு விவாதங்கள் - காங்கிரஸ் பங்கேற்கவில்லை
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இன்று (ஜூன் 1) வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் வருகிற ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக இருக்கிறது. இது குறித்த விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி