
குரங்கிடம் இருந்து மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் பலி
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (61) என்பவரது மனைவி, வீட்டின் மொட்டை மாடியில் காயப்போட்ட துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த குரங்குகள், அவரை தாக்கியுள்ளன. மனைவியின் சத்தம் கேட்ட அவரைக் காப்பாற்ற ஜெகதீஷ் மாடி மேலே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குரங்குகள் ஜெகதீஷையும் தாக்க சென்றது. இதில் நிலைதடுமாறிய அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.