பெற்றோர்களே..! இந்த கேள்விகளை உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள்

72பார்த்தது
பெற்றோர்களே..! இந்த கேள்விகளை உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள்
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் சில கேள்விகளை அடிக்கடி கேட்க வேண்டும். நான் உன்னுடன் இருக்கும்போது அல்லது நான் உன்னை விட்டு விலகி இருக்கும்போது, ​​எப்படி உணர்கிறாய்? என குழந்தைகளிடம் கேளுங்கள். பதிலை வைத்து அவர்களின் உணர்வை அறியலாம். உங்கள் குடும்பத்துடன் நீங்கள் சேர்ந்து இருந்ததில் உங்களுக்கு பிடித்தது என்ன? என்று கேட்கலாம். குழந்தைகளின் மனநலம் குறித்து பெரியவர்கள் அவ்வபோது விசாரிக்க வேண்டியது அவசியம். புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? என்று குழந்தைகளிடம் கேட்பது நல்லது. புதிய மொழி, நீச்சல், நடனம், பாட்டு போன்ற பல விஷயங்களை அவர்கள் விரும்பலாம்.

தொடர்புடைய செய்தி