ஆன்லைன் மோசடி - SBI பயனர்களுக்கு எச்சரிக்கை

76பார்த்தது
ஆன்லைன் மோசடி - SBI பயனர்களுக்கு எச்சரிக்கை
ஆன்லைன் மோசடி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வகையில் மோசடி செய்யத் தொடங்கியுள்ளனர். அதன்படி, 'SBI வெகுமதி’ என்ற பெயரில் வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி மக்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இந்த நிலையில் SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. அதன்படி, 'உங்கள் SBI ரிவார்டு ரூ.7,250 ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது' என எந்த செய்தியையும் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெகுமதி புள்ளிகள் தொடர்பான எந்த இணைப்புகளையும் அவர்கள் அனுப்ப மாட்டார்கள் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி