சுரேஷ் கோபி தோற்பதை யாராலும் தடுக்க முடியாது - பினராயி விஜயன்

76பார்த்தது
சுரேஷ் கோபி தோற்பதை யாராலும் தடுக்க முடியாது - பினராயி விஜயன்
நடிகரும், திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி, தேர்தலில் தோற்பதை யாராலும் தடுக்க முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், பொதுமக்களின் நன்கொடைகளே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஆதாரம். திருச்சூரில் சுரேஷ் கோபி தோல்வியை சந்திக்க நேரிடும். சுரேஷ் கோபியை அமலாக்கத்துறை மற்றும் பாஜகவால் காப்பாற்ற முடியாது என்றும் கூறினார்.

நடிகரும், பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபி ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி