காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சம்

76பார்த்தது
கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது சமவெளி பகுதிகளின் நிலவும் கடுமையான வறட்சி உணவு பற்றாக்குறை காரணமாக மலை மாவட்டங்களை நோக்கி யானை கூட்டங்கள் படை எடுத்து வருகின்றன குறிப்பாக கோத்தகிரி முள்ளூர் மலைப்பாதையில் தேயிலை தோட்டங்களில் முகாமிடும் காட்டு யானைகள் அவ்வப்போது சாலைகளில் முகாமிடுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர் இந்த நிலையில் கோத்தகிரி அருகே கோழித்துறை பழங்குடியினர் கிராமத்தில் குட்டிகளுடன் காட்டு யானைகள் முகமிட்டுள்ளன இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலைகளில் உலா வருவதால் பழங்குடியின கிராம மக்கள் வெளியே வரவும் பணிக்கு செல்லவும் அச்சமடைந்துள்ளனர் எனவே வனத்துறையினர் யானைக் கூட்டங்களை கண்காணித்து வேறு அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி