நாமக்கல் மாவட்டத்தில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகின்ற நிலையில், இன்று இராசிபுரத்தில் உள்ள இராசிபுரம் நகர பகுதியில் இறுதிநேர தேர்தல் பரப்புரை அமைச்சர் மதிவேந்தன் மேற்கொண்டார். இதில் திமுக சார்பாக போட்டியிட்டு வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்தார். மேலும் உடன் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.