கார்த்தி சிதம்பரம் மனைவி மீது வழக்குப்பதிவு

53பார்த்தது
கார்த்தி சிதம்பரம் மனைவி மீது வழக்குப்பதிவு
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவரது மனைவி ஸ்ரீநிதி பிரசாரம் மேற்கொள்கிறார். இன்றைய பரப்புரையின் போது தேர்தல் அதிகாரிகள் அவரிடம் அனுமதிக் கடிதம் கேட்டனர். அதற்கு ஆட்டோவில் சென்று பிரச்சாரம் செய்வதற்கான கடிதத்தை காட்டியதால் ஏற்க மறுத்துவிட்டனர். தேர்தல் அதிகாரி செந்தில்வேல் அளித்த புகாரின் பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீநிதி உள்ளிட்ட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி