நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கீரம்பூரில் ‘கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி’ வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் உழவர் பயிற்சி நிலையம் வேளாண் துணை இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட தமிழக அரசின் பல்வேறு வேளாண் சார்ந்த பல முன்னோடி நலத்திட்டங்கள் குறித்து பயிற்சி வழங்கினார்.
மேலும் வேளாண்உதவி இயக்குநர் சித்ரா, பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய “மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்” கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப் படுகின்றது என்று விளக்கமளித்து பயிற்சி வழங்கினர்.
சிறப்பு பயிற்றுநர் துணை வேளாண் அலுவலர் (ஓய்வு) மாதேஸ்வரன், வேளாண்மை அலுவலர் ரகசிகபிரியா ஆகியோர் காரிப் பருவத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்து பயிற்சி வழங்கினர்.
அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். இரமேஷ் (ம) உதவி தொழில் நுட்ப மேலாளர்கள். கவிசங்கர் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.