மாரடைப்பால் SI உயிரிழப்பு.. நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்

74பார்த்தது
மாரடைப்பால் SI உயிரிழப்பு.. நிதியுதவி  அறிவித்த முதலமைச்சர்
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முத்துக்குமாரின் இறப்பு காவல் துறைக்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். முத்துக்குமார் மறைவுக்கு போலீசார் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி