இளைஞரை பலாத்காரம் செய்த எம்எல்சி

61பார்த்தது
இளைஞரை பலாத்காரம் செய்த எம்எல்சி
கர்நாடகாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஆண் தொண்டர் ஒருவர், தன்னை ஜேடிஎஸ் எம்எல்சி சுராஜ் ரேவண்ணா, இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்ததாக முதலமைச்சர், உள்துறை அமைச்சர், டிஜிபி மற்றும் ஹசானா மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். வேலை கேட்டுச் சென்ற தன்னை இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் எஸ்பி முகமது சஜீதா தெரிவித்தார்.

பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் தான், இந்த சூரஜ் ரேவண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி