அமைச்சரின் சனாதன சர்ச்சை வழக்கு - இன்று தீர்ப்பு

57பார்த்தது
அமைச்சரின் சனாதன சர்ச்சை வழக்கு - இன்று தீர்ப்பு
சனாதன சர்ச்சை விவகாரம் தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, திமுக எம்.பி., ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ-வாரண்டோ வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 9 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, கடந்த நவம்பர் 23ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்புடைய செய்தி