இளம் பெண் மாயம் என தந்தை புகார்.

54பார்த்தது
இளம் பெண் மாயம் என தந்தை புகார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண் மாயம் என தந்தை புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவனம்பட்டி மந்தை தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் போற்றி செல்வி (33 ) இவருக்கு ஆனந்தன் என்பருடன் 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கணவர் ஆனந்தன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் போற்றி செல்வி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று மகள் மீண்டும் வீடு விரும்பவில்லை என்று அவரது தந்தை நாகராஜ் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி