அந்தர் பல்டி அடித்த தினகரன். திமுக எம். பி பேட்டி.

50பார்த்தது
அந்தர் பல்டி அடித்த தினகரன். திமுக எம். பி பேட்டி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு தேனி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், கிராமம் கிராமமாக சென்று நேற்று நன்றி தெரிவித்து பரப்புரை மேற்கோண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேனி எம். பி. தங்கதமிழ்ச்செல்வன்.

டிடிவி தினகரனை விட 2 லட்சத்து 80 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன் ஆரம்பத்தில் பிஜேபி-யையும், நரேந்திர மோடி-யையும் எதிர்த்து பயங்கர அரசியல் செய்தார். ஆனால் தற்போது அந்தர் பல்டி அடித்து கூட்டணியில் நிற்கிறார், அவர் கட்சியைவே பிஜேபி-யில் சேர்க்க போவதாக சமூக வலைதள செய்தி பார்த்தேன் எனவும், டிடிவி தினகரன் பிஜேபியுடன் சேர்ந்ததற்கு முக்கிய காரணம், ப்ரா வழக்கு, இரட்டை இலை வழக்கு என இரு வழக்கிலிருந்து விடுபட தன்மானத்தை இழந்து பிஜேபியில் சேர்ந்துள்ளார். அது எடுபடாது அவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும், தண்டனைக்கு பின் அவர் வந்து கட்சியை நடத்தட்டும் பார்க்கலாம் பேசினார்.

தொடர்புடைய செய்தி