போபாலில் உள்ள ஒரு 33 வயது நபரின் கண்ணில் இருந்து ஒரு அங்குல நீளமுள்ள உயிருள்ள புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். நீண்ட காலமாக பார்வை குறைபாடுதான் பாதிக்கப்பட்டிருந்த அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவரின் கண்ணில் உயிருடன் புழு ஒன்று நகர்ந்துள்ளது. பின்னர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த புழுவை எடுத்துள்ளனர். பச்சையாகவோ அல்லது சரியாக சமைக்காத இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் இந்த ஒட்டுண்ணியான க்னாதோஸ்டோமா உடலுக்குள் நுழையும் என கூறப்படுகிறது.