வடமாடு மஞ்சுவிரட்டு விழா கோலாகலம்

53பார்த்தது
மதுரை யானைமலை புதுப்பட்டி அருகே உள்ள வளவன் திடலில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாள் மற்றும் கட்சி அங்கீகார விழா முன்னிட்டு 4 ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா, திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில், நிர்வாகிகள் எல்லாளன், செல்லப்பாண்டியன் மற்றும் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டரணி மாவட்ட அமைப்பாளரும் வீரத்தமிழர் வடமாடு பேரவை மாவட்ட செயலாளருமான சிறுத்தைகனி ஒருங்கிணைத்தார்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் பி. ராஜசேகரன், வி. சி. க பிரமுகர்கள், பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், வீரத்தமிழர் வடமாடு பேரவை நிர்வாகிகள், யா.புதுப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த காளைகளும், மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் விழாக் குழு சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பங்கேற்ற சில வீரா்கள் காயமடைந்து சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினா்.

தொடர்புடைய செய்தி