நேர்த்திக்கடன் செலுத்த தயாராகி வரும் பக்தர்கள்.

1053பார்த்தது
மதுரை சித்திரைத் திருவிழாவின் கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்த விரதமிருக்கும் பக்தர்கள் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை ( ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில் அழகர் கோயிலில் கொடியேறியதிலிருந்து விரதமிருந்து கள்ளழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தங்கள் நேர்த்திக்கடனை ஏராளமான பக்தர்கள் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அதற்குரிய தொப்பி, துருத்தி, மாலைகள் மற்றும் அலங்கார பொருட்கள் வாங்கிட கீழமாசிவீதி தேரடி பகுதியில் பக்தர்கள் வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி