தனிநபரின் சொத்துகளையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் என காங்கிரஸ் எப்போது கூறியது ? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் என காங்கிரஸ் எப்போது பேசியது? மோடியைப் போல் அடாவடியாகப் பேசியது இல்லை. இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட அவரின் ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மன்மோகன் சிங்கின் பேச்சைத் திரித்து மோடி பேசுவது விஷமத்தனமானது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.